ஆவடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி: மருத்துவமனையில் ஒருவர் அனுமதி

ஆவடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலியானார்; இன்னொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-05-06 01:00 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு 47வது வார்டு அசோக் நிரஞ்சன் நகரில் உள்ள ஆப்டிமா அப்கிரேட் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, தரைத்தளத்தில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டியில் குணசேகரன் (35) முத்து (25) என இருவரும் உள்ளே இறங்கி வேலை செய்துகொண்டிருந்தனர். 

அப்போது, கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு முத்து என்பவர் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளி குணசேகரன் என்பவர் மயங்கி கிடந்தார் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து,  இறந்து போன தொழிலாளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News