கத்தி காட்டி பணம் பறித்தவர் கைது!

பாளையங்கோட்டையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றவரை கைது செய்துள்ளது காவல்துறை.

Update: 2023-05-17 09:07 GMT

பாளையங்கோட்டையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றவரை கைது செய்துள்ளது காவல்துறை.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனது பைக்கில் பாளையங்கோட்டை உழவர் சந்தை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் தரமாட்டேன் என்று மறுத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் நடக்க ஆரம்பித்தது. இதனையடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை சுந்தர் எடுத்து மிரட்டியுள்ளார். பணம் தராவிட்டால் குத்தி விடுவேன் என்றும் கூறியுள்ளார். இதனால் நமக்கு எதுக்கு வம்பு என்று தன்னிடம் இருந்த 1000 ரூபாயை கொடுத்துள்ளார்.

உடனே விக்னேஷ் காவல்நிலையம் சென்று நடந்ததைக் கூறி புகார் எழுதி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பெயரில் பாளை மேட்டுத் திடல் காவல் ஆய்வாளர் தனலட்சுமி வழக்குப் பதிவு செய்து சுந்தரை கைது செய்துள்ளார். 

Tags:    

Similar News