நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் அதிமுகவினர் விருப்ப மனு அளிப்பு

நெல்லையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாவட்ட செயலாளர் தச்சை.கணேசராஜாவிடம் விருப்ப மனுக்களை அளித்தனர்.

Update: 2021-11-29 13:10 GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக சார்பில் நான்காவது நாளாக விருப்பமனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக சார்பில் நான்காவது நாளாக விருப்பமனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நெல்லை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 4வது நாளாக தச்சநல்லூரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாவட்ட கழக செயலாளர் தச்சை-கணேசராஜாவிடம் மாநகராட்சி 36-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆனந்தி மகாராஜேந்திரன் பாளையங்கோட்டை பகுதிக்கு போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களுடைய விருப்ப மனுக்களை மாவட்ட செயலாளரிடம் அளித்தனர்.

அப்போது உடன் பாளையங்கோட்டை தெற்கு பகுதி கழக செயலாளர் திருத்து சின்னத்துரை, தச்சை பகுதி கழக செயலாளர் சிந்து முருகன், தொழில் அதிபர் சிவக்குமார், நெல்லை மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் அம்மா தி கிரேட் சிவந்தி மகாராஜேந்திரன், வட்ட செயலாளர் மதுரை வீரன், முன்னாள் வட்ட செயலாளர்கள் பாலமுருகன், சரவணன், காசி, ஜெயசிங், சாலமோன், பால்ராஜ், மூனிஸ்வரன், கற்பகவல்லி, MGR செல்வம், C.M.சண்முகநாதன், வாகை மணி, வசந்தா, பாப்பா ரத்தினம், பாளைங்கோட்டை பகுதி இணை செயலாளர்கள் நடராஜன், ராஜன் இளைஞர் பாசறை மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Tags:    

Similar News