டீக்கடை அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

நெல்லை அருகே டீக்கடை அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-28 03:45 GMT

நெல்லை அடுத்துள்ள தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் (41), என்பவர் ராஜவல்லிபுரத்தில் டீக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த 26ம் தேதி அன்று இரவு முருகேசன் டீ கடையில் இருக்கும் போது ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த, இசக்கிமுத்து (21), மாயாண்டி(20) ஆகிய இருவரும் அவர்களின் கூட்டாளிகளுடன் பைக்கில் முருகேசனின் டீக்கடை முன்பு நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

முருகேசன் வளர்க்கும் நாய் அவர்களை பார்த்து குறைத்துள்ளது, இதனால் கோபமடைந்த எதிரிகள் முருகேசனை அவதூறாக பேசி நாளை எப்படி நீ டீ கடை நடத்துகிறாய் என பார்ப்போம் என மிரட்டல் விடுத்து சென்றனர்.

பின் அன்று இரவு 11 மணி அளவில் எதிரிகள் முருகேசன் டீ கடைக்கு வந்து டீ கடையை கம்பால் சேதப்படுத்தியும் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். தகவலறிந்து வந்த முருகேசனை மேலும் நீ எங்களை எதிர்த்து பேசினால் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முருகேசன் தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் செல்லதங்கம் விசாரணை மேற்கொண்டு கடையை உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த மாயாண்டி மற்றும் இசக்கிமுத்துவை கைது செய்தார்.

Tags:    

Similar News