நெல்லை-பாதாள சாக்கடை, ஸ்மார்ட் சிட்டி திட்டம் விரைவுபடுத்தப்படும் : மாநகராட்சி ஆணையர் தகவல்.

திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி திட்டம் விரைவு படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

Update: 2021-06-16 12:07 GMT

நெல்லை மாநகராட்சி புது ஆணையாளராக விஷ்ணுசந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நெல்லை மாநகராட்சி புதிய ஆணையராக விஷ்ணுசந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். பாதாளச்சாக்கடை திட்டம் , ஸ்மார்ட் சிட்டி திட்டம் விரைவு படுத்தப்படும், நெல்லையின் பாரம்பரியம் , கலாச்சாரத்தை பாதுகாக்க புதிய திட்டங்கள் வகுக்கப்படும் என தெரிவித்தார்.

நெல்லை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த கண்ணன் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ஐ.ஏ.எஸ் அதிகாரியான திருச்செந்தூர் கோவில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த விஷ்ணுசந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் இன்று நெல்லை மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தான் 2015-ம்  ஆண்டு ஐ.ஏ.எஸ் முடித்து தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருவாய் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் என்பது புதிதாகும் . நெல்லை மாநகராட்சியைப் பொறுத்தவரை பாதாளச்சாக்கடை திட்டம் , ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள் காலதமதமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் . மேலும் பழுதடைந்த சாலைகள் , குடிதண்ணீர் பிரச்சனை என மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு அதி முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவேன் , ஊழல்லற்ற மாநகராட்சி நிர்வாகம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும், மாவட்டத்தின் முக்கிய நதியான தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல்லை புராதான நகரமாகும் ,  நெல்லையின் பண்பாடு , கலாச்சாரத்தை பாதுகாக்க புதிய திட்டங்கள் வகுக்கப்படும், பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்ட அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News