திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!

திருநெல்வேலி காவல்துறை சார்பில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-07 05:45 GMT
பழைய வாகனங்கள் (கோப்பு படம்)

வாகன ஏல அறிவிப்பு

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1 இரு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 4 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 13.12.2023-ம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

 ஏலம் எடுக்க விரும்புவோர் 08.12.2023-ம் தேதி காலை 10.00 மணி முதல் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் வாகனத்திற்கு ரூ.5000/- முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (இரு சக்கரத்திற்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18%) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது. 

Tags:    

Similar News