திருநெல்வேலி : சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தொடங்கியது
திருநெல்வேலி : சிதிலமடைந்த சாலையை சீரமைக்கும் பணி மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மண்டலப் பகுதிக்கு உட்பட்ட டவுண் ஆர்ச் முதல் அருணகிரி திரையரங்கம் வரை செல்லும் இணைப்புச் சாலை தொடர் மழையினால் சிதிலமடைந்திருந்தது, பொதுமக்கள் பலரும் சாலையை சீரமைக்க தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். தற்போது சாலையை சீரமைக்கும் பணி மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.