நெல்லையில் கைது செய்யப்பட்ட கனிம துறை உதவி இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி

நெல்லையில் மணல் கடத்திய வழக்கு சம்பந்தமாக கனிமவள துறை உதவி இயக்குநர் சபியா என்ற பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-04-11 02:20 GMT

போலீசாரால் கைது செய்யப்பட்ட கனிமவள துறை உதவி இயக்குநர் சபியா.

நெல்லையில் கைது செய்யப்பட்ட கனிம துறை உதவி இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி. சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட ஊட்டி கனிமவளத்துறை உதவி இயக்குனரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதால் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊட்டியில் கனிமவள துறை உதவி இயக்குநராக பணியாற்றும் சபியா என்ற பெண் அதிகாரியை நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் நெல்லையில் கைது செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த 2019 ம் ஆண்டு நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் எம் சாண்ட் நிறுவனம் நடத்துவதாக கூறி கேரளாவுக்கு சட்டத்திற்குப் புறம்பாக மணல் கடத்திய வழக்கு சம்பந்தமாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கனிம வளத்துறை அதிகாரி மருத்துவ பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு உடலில் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதினால் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News