நெல்லையில் தச்சை கணேசராஜா தனது வாக்கினைப் பதிவு செய்தார்

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா தனது வாக்கினை பதிவு செய்தார்.

Update: 2022-02-19 05:50 GMT

திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில் அதிமுக திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை. N. கணேசராஜா  இன்று காலை மாநகராட்சி 2வது வார்டுக்குட்பட்ட தச்சநல்லூர் பங்களா நடுநிலைப்பள்ளியில் வாக்களித்து, தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற, தங்களது வாக்குகளை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News