ஊரக உள்ளாட்சி தேர்தல்: கங்கைகொண்டானில் அதிமுக ஆலோசனை கூட்டம்

நெல்லையை அடுத்த கங்கைகொண்டானில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-27 08:50 GMT

நெல்லையை அடுத்த கங்கைகொண்டானில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கங்கைகொண்டானில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை- கணேசராஜா தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, கழக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News