மேலப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை - நகா்ப்புற செயற்பொறியாளா் தகவல்

மேலப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் தகவல்

Update: 2021-07-16 01:31 GMT

பவர் கட் மாதிரி படம் 

மேலப்பாளையம் சுற்று வட்டாரங்களில் வரும் சனிக்கிழமை (ஜூலை 17) மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 17) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை பிரதான சாலை, சந்தை பகுதிகள், குலவணிகா்புரம், மத்திய சிறைச்சாலை பகுதி, மாசிலாமணி நகா், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், மருத்துவமனை சாலை, தெற்கு புறவழிச்சாலை, பஜார் திடல், ஜின்னா திடல், திருநெல்வேலி நகர சாலை, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதா் தெரு, உமறுப்புலவா் தெரு, ஆசாத் சாலை உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 


Tags:    

Similar News