தொற்றால் உயிரிழந்த நான்கு பேரை நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

தொடரும் மரணங்கள் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த நான்கு உடலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள் தகனம் மற்றும் நல்லடக்கம் செய்தனர்.

Update: 2021-05-06 02:00 GMT

நெல்லை மாநகராட்சி பகுதியியை சார்ந்த மூவர் 68 வயதுபெண் ,70வயது ஆண்,68வயது ஆண் சாத்தான்குளத்தை சார்ந்த 60 வயது ஆண் உட்பட நான்கு நபர்கள் இன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தார்கள்.

உயிர்இழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் அவர்களை தொடர்பு கொண்டு தகனம் மற்றும் நல்லடக்கம் செய்ய உதவி கோரினர்

இதனை அடுத்து பாபாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வ குழுவினர் உடல்களை பெற்று அவரவர்‌ மதப்பிரகாரம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் மற்றும் கல்லரை தோட்டத்திலும்,சிந்து பூந்துறை நவீன எரிவாயு தகன மேடைக்கு கொண்டு சென்று தகனம் மற்றும் நல்லடக்கம் செய்தனர்.

Tags:    

Similar News