நெல்லை போலி மணல் ஆலை விவகாரம், கலக்கத்தில் காவல்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள்

நெல்லையில் போலி மணல் ஆலை விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கும் முன் பல பெரும் புள்ளிகள் அதிச்சிடைந்துள்ளனர்.

Update: 2021-07-21 17:45 GMT

திருநெல்வேலியில் போலீ மணல் ஆலை,

நெல்லை கல்லிடை குறிச்சி போலி எம்சாண்ட் ஆலை அனுமதி பெற்று ஆற்று மணல் கடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ஒருவரிடம் ஆறு கோடி ரூபாய் கைமாறிய விவகாரம் உட்பட பல தில்லுமுல்லுகள் வெளியாக தொடங்கியிருக்கிறது

சிபிசிஐடி விசாரணைக்கு.உத்தரவு போடபட்ட சில மணிநேரங்களில் பல அதிர்ச்சிதகவல்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

எம்சாண்ட் தயாரிக்க அனுமதி கொடுத்த அதிகாரி அங்கே தயாரிப்பு இயந்திரம் இல்லாத நிலையில் எப்படி அனுமதி கொடுத்தார்? கோடிக்கணக்கான மதிப்புள்ள கனிமவளம் திருடப்படும் போது வருவாய்துறை கனிம வளத்துறை,காவல்துறை கண்டு கொள்ளாதது ஏன்?

முக்கிய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யாத மர்மம் என்ன.பறிமுதல் செய்யப்பட்ட குமரிமாவட்டத்தை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரியின் பத்துக்கு மேற்பட்ட லாரிகள், டிப்பர் எதன்.அடிப்படையில் விடப்பட்டன.

என்பதற்கான மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தாலே மணல் கடத்தல் விவகாரத்தில் உள்ள பெரும் புள்ளிகள் சிக்குவார்கள்.வழக்கு விசாரணை சரியான திசையில் செல்லும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்செய்யுமா சிபிசிஐடி போலீஸ்

Tags:    

Similar News