நெல்லையில் மதுபானம், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 47பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம், புகையிலை பொருட்களை விற்பனை செய்த 47 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2021-08-02 17:48 GMT

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், சட்டவிரோதமாக மதுபானங்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 27.07.2021 முதல் 01.08.2021-ம் தேதி வரை நெல்லை மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோத மதுபான பாட்டில்கள், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 47 பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 123 மதுபான பாட்டில்கள் மற்றும் 3 கிலோ 675 கிராம் புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News