திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மேயர் சரவணன் தலைமையில் நடந்தது.

Update: 2022-03-15 16:17 GMT

பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார் நெல்லை மேயர் சரவணன்.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.  முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் உள்ள குறைகளை மனுக்களாக அளித்தனர்.

முகாமில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் மீதான உரிய நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

முகாமில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜு, மாநகர பொறியாளர், மாநகர நல அலுவலர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.


Tags:    

Similar News