நெல்லையப்பர் கோவில் யானை தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவில் வாசல் முன்பு உள்ள தேசிய கொடிக்கு கோவில் யானை காந்திமதி, பிளிறி தேசியக்கொடிக்கு மரியாதை செய்தது

Update: 2022-01-26 05:32 GMT

தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி 

நாட்டின் 73வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட ஒரு சில கோவில்களில் மட்டும் கோவிலில் முறைப்படி தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவிலில் 73வது குடியரசு தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சுவாமி நெல்லையப்பர் கோவில் முன்பு விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே இந்திய தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் நிர்வாக அதிகாரி ராமராஜூ கொடியேற்றி மரியாதை செய்தார். கோவில் வாசல் முன்பு உள்ள தேசிய கொடிக்கு கோவில் யானை காந்திமதி, பிளிறி தேசியக்கொடிக்கு மரியாதை செய்தது.

தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை செய்தனர்.பொதுமக்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு இனிப்புகளும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News