நெல்லை மாநகராட்சியில் கூட்டு துப்புரவுப்பணி: மேயர் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட புதிய வார்டு-16 பகுதிகளில் கூட்டு துப்புரவுப் பணியினை மேயர் பி.எம்.சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-04-28 13:30 GMT

வார்டு-16 பகுதிகளில் துப்புரவுப் பணியை ஆய்வு செய்த மேயர் பி.எம்.சரவணன்.

திருநெல்வேலி டவுன் மாநகராட்சிக்குட்பட்ட புதிய வார்டு 16 காமராஜர் தெரு, நல்ல முத்தம்மன் கோவில் தெரு, வடக்கு அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு கருவேலன்குன்று தெரு, அக்கசாலை விநாயகர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில், வடிகால்  தூர்வாருதல், குடிநீர் வசதிகள், பொது தண்ணீர் குழாய்கள் சரி செய்தல், சாலைகள் சீரமைப்பு, குறுகிய பாலங்கள் சீரமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை, மேயர் பி.எம்.சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அப்பகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி உதவி ஆணையாளர் லெ.வெங்கட்ராமன் (நிர்வாகம்), உதவி செயற்பொறியாளர் பைஜூ, சுகாதார இளங்கோ உட்பட அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News