மோடி,இபிஎஸ்சை செல்லா காசாக்க வேண்டும்- உதயநிதி

Update: 2021-03-24 09:15 GMT

மோடியையும் எடப்பாடி பழனிச்சாமியையும் செல்லா காசாக்க வேண்டும் என திருநெல்வேலி பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஏஎல்எஸ்.லட்சுமணனை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி தச்சநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது:புதிய இந்தியா பிறக்க போவதாக மோடி தெரிவித்தார். நானும் 3 ஆண்டுகளாக போகும் இடங்களில் எல்லாம் தேடி பார்க்கிறேன். புதிய இந்தியாவை காணவில்லை. இதுவரை 15,000 கோடி மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரி கொடுத்துள்ளோம். அதை திருப்பி கேட்டால், நிதி நெருக்கடி இருப்பதால் தர முடியாது என்கிறார் மோடி.

ஆனால் அவர் மட்டும் செல்வதற்காக 8,000 கோடியில் புது சொகுசு விமானம் வாங்கியுள்ளார். 10,000 கோடியில் புது நாடாளுமன்றம் கட்டுகிறார். இது யார் பணம்? உங்களின் பணம். வரும் தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்து மோடியையும், எடப்பாடிபழனிச்சாமியையும் செல்லா காசாக்க வேண்டும் என கூறினார்.

Tags:    

Similar News