திருநெல்வேலியில் டிச.4ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் டிச.4ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் பாளையங்கோட்டையில் நடைபெற உள்ளது.

Update: 2021-11-29 15:14 GMT

திருநெல்வேலியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திருநெல்வேலி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 04.12.2021 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை புனித யோவான் கலைக்கல்லூரி (St. John's Arts and Science College), பாளையங்கோட்டையில் வைத்து நடைபெற உள்ளது.

இத்தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 5-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும் முன்னோடி வங்கி மூலமாக சுய தொழில் செய்வதற்கு கடன் உதவிகள் பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது Resume, கல்விசான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் 9.00 மணிக்கு விண்ணப்பங்களை நேரடியாக பெற்று தங்கள் விவரங்களை பதிவு செய்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் மற்றும் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவு செய்தல் அவசியம். வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெற NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel ல் இணைந்து பயன்பெறலாம். காலை இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News