நெல்லையில் முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

முன்னீர்பள்ளத்தில் முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

Update: 2021-08-21 08:18 GMT
பைல் படம்

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருவை பகுதியைச் சேர்ந்த பராசக்தி(24) என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த குமார் என்ற ராஜேஸ்வரன்(26) என்பவரின் சித்தப்பா மகன் உத்திரமூர்த்தி என்பவர் பிரச்சனை செய்துள்ளார்.

அதனால் பராசக்தி முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் உத்திரமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்து தற்போது உத்திரமூர்த்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சம்பவத்தன்று  பராசக்தி அவரது வீட்டின் முன்பு நடந்து வந்து கொண்டிருந்தபோது குமார் என்ற ராஜேஷ்வரன் பராசக்தியை வழிமறித்து உத்திரமூர்த்தி சிறையில் இருப்பதற்கு நீ தான் காரணம் என்று கூறி அவதூறாக பேசி அரிவாளால் தாக்கும் போது பராசக்தி சுதாரித்துக்கொண்டு விலகியுள்ளார்.

பின்னர் பராசக்தி சத்தம் போடவும் அருகிலிருந்தவர்கள் வரவும் ராஜேஷ்வரன் பராசக்தியை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து பராசக்தி முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் விசாரணை மேற்கொண்டு பராசக்தியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த குமார் என்ற ராஜேஸ்வரனை கைது, செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Tags:    

Similar News