நெல்லை மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் மே தினத்தன்று மூடப்பட்டிருக்கும்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் மே தினத்தன்று மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு அறிவிப்பு

Update: 2022-04-27 07:30 GMT

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் மே தினத்தன்று மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் கிளப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 01.05.2022 மே தினத்தன்று மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு அறிவிப்பு. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

அரசாணை எண்.1 உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை( VI )துறை நாள்: 03.01.2012, அரசாணை எண்.50 உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ( VIII )துறை நாள்: 29.10.2012, அரசாணை எண்.32 உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (VIII ) துறை நாள்: 24.05.2013 மற்றும் சென்னை, ஆணையர், மதுவிலக்கு மற்றும் ஆயம் கடிதம் எண்..P&E2(1)/129/2017, நாள்: 25.04.2022 ஆகியவற்றின்படி 01.05.2022 (ஞாயிற்றுக்கிழமை) மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் (FL1 உரிமங்கள் ) அவற்றுடன்; இணைந்த மதுபானக்கூடங்கள், FL2 கிளப்புகள்இ தங்கும் விடுதிகளுடன் இணைந்தFL3, FL3A FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் கிளப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 01.05.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்

Tags:    

Similar News