கால்நடை பராமரிப்புத்துறை நேர்காணல் நிறுத்திவைப்பு

திருநெல்வேலியில், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-28 13:00 GMT

திருநெல்வேலி மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு பாளையங்கோட்டை TDTA பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குறைந்தோர் சிறப்புபள்ளியில் 11.05.2022 முதல் 21.05.2022 வரை நடைபெற இருந்தது.

இந்நிலையில்,  இந்த நேர்காணல் சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள். ஆணையர் உத்தரவின் பேரில் நிர்வாக காரணங்களினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் நேர்காணல் நடத்துவது தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News