நெல்லையில் சித்திரை விசுவை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரிப்பு

நெல்லையில் சித்திரை விசுவை முன்னிட்டு மலர் சந்தைகளில் பூக்களின் விலை அதிகரித்து, பிச்சி பூ கிலோ 1500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2022-04-13 13:45 GMT

சித்திரை விசுவை முன்னிட்டு நெல்லை மலர் சந்தைகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. 

சித்திரை விசுவை முன்னிட்டு நெல்லை மலர் சந்தைகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பிச்சி பூ கிலோ 1500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், நெல்லை பூ சந்தைகளில் பூக்களின் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாகவே பூக்களின் விலை குறைவாக காணப்பட்டது. இந்த நிலையில் நாளை தினம் சித்திரை விசு தமிழ் வருடப்பிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் நெல்லை மலர் சந்தைகளில் பூக்களின் விலை அதிகரித்து காணபடுகிறது.

மல்லிகை பூ நேற்றைய தினம் ஒரு கிலோ ரூபாய் 500க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் கிலோ ரூபாய் 700 முதல் 800 வரையிலும், பிச்சிப்பூ ஒரு கிலோ நேற்றைய தினம் 1000 க்கு விற்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் ரூபாய் 1500க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிலோ கேந்தி பூ ரூபாய் 80 க்கும், சேவல் கொண்டை ரூபாயை 60க்கும், அரளி பூ ரூபாய் 100 க்கும் விற்பனையாகிறது. கனகாம்பரம் ஒரு கிலோ 600 க்கும், சம்பங்கி ரூபாய் 200 க்கும், நாட்டு சம்பங்கி ரூபாய் 300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பன்னீர் ரோஜா ஒரு கிலோ 80 க்கும், பட்ரோஸ் ஒரு கிலோ ரூபாய் 150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை கால வழிபாடு நடத்துவதற்காக பொதுமக்கள் காலை முதலே நெல்லை சந்திப்பு மலர் சந்தையில் பூக்களை வாங்க அதிகமான அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News