நெல்லை மாவட்டத்தில் மே.1ம் தேதி கிராம சபை கூட்டம்

மே 1ஆம் தேதி நடைபெறும் கிராமசபை கூட்டம் கோடை வெயில் காலமாதலால் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-04-29 08:00 GMT

நெல்லை மாவட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினம் 01.05.2022 அன்று கிராம சபைக் கூட்டம் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக காலை 10.00 மணியளவில் நடத்தப்பட வேண்டும் என அரசால் அறிவுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டப்பணிகளின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் பட்டியல் மற்றும் மத்திய மாநில அரசால் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், ஊராட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணிகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News