திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

Update: 2023-05-23 16:57 GMT

திருநெல்வேலி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் கேட்பதற்கான குறைதீர் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடக்க இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள், காலதாமதம் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பான குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக குறைதீர் கூட்டம் நடக்கும். ஒவ்வொரு முறையும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும் இந்த கூட்டம் வரும் மே 26ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை ஏற்று நடத்துவார். இந்த கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News