நெல்லை-தனியார் விடுதியில் சூதாடிய கும்பல் கைது: பணம் பறிமுதல்

நெல்லையில் தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து லட்ச ரூபாய் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-08-30 02:15 GMT

கைது கார்ட்டூன் படம் 

நெல்லை சந்திப்பு பகுதியில் ஒரு தனியார் விடுதி அறையில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சந்திப்பு காவல் ஆய்வாளர் பொறுப்பு முத்துலட்சுமி மற்றும் போலீசார்  துரிதமாக செயல்பட்டு விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விடுதி அறையில் 7 பேர் கொண்ட கும்பல் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்திய 159 சீட்டுகள் மற்றும் ரூ.1,08,720/ பணம் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வழக்கை விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News