நெல்லை சிந்துபூந்துறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கல்

சிந்துபூந்துறையில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை கவுன்சிலர் ஜெகநாதன் வழங்கினார்.

Update: 2022-03-14 11:36 GMT

திருநெல்வேலி மாநகராட்சி 30 வது வார்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை முன்னாள் துணைமேயர் ஜெகநாதன் வழங்கினார்.

திருநெல்வேலி மாநகராட்சி 30 வது வார்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை முன்னாள் துணைமேயர் ஜெகநாதன் வழங்கினார்.

தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட 30வது வார்டு சிந்துபூந்துறை பகுதியில் உள்ள நியாய விலை கடையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 30 வது வார்டு கவுன்சிலரும், முன்னாள் துணைமேயருமான ஜெகநாதன் என்ற கணேசன் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், வட்டச்செயலாளர் நைனா முத்துராஜ், பகுதி இளைஞரணி துணை தலைவர் நல்ல பெருமாள் மற்றும் நிர்வாகிகள் ஆட்டோ குமார், சீதாராமன், கொம்பையா, ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News