நெல்லையில் நடிகர் விவேக் மறைவிற்கு முகநூல் நண்பர்கள் குழுவினர் அஞ்சலி

நெல்லையில் நடிகர் விவேக் மறைவையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய முகநூல் நண்பர்கள் குழுவினர்

Update: 2021-04-17 17:00 GMT

சமூக ஆர்வலரும் திரைப்பட நகைச்சுவை நடிகருமான விவேக் மறைவையொட்டி முகநூல் நண்பர்கள் குழு சார்பில் நெல்லை ராம் தியேட்டர் வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து ,மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவரும் நடிகர் விவேக் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்ற திருநெல்வேலி மாவட்ட செயலாளரும் நடிகருமான பழவூர் சுபாஷ், இசைக் கலைஞர் பழவூர் சபரி, இளம் கலையரசு விருது பெற்ற ராகுல், சமூக ஆர்வலர் திருநாவுக்கரசு, பாளையங்கோட்டை சமாதானபுரம் தொழிலதிபரும் வழக்கறிஞருமான முருகப்பன், வழக்கறிஞர் பாளை ரமேஷ்,  சேரன்மகாதேவி வழக்கறிஞர் இசக்கி, பரணி டிவி அதிபர் சண்முகவேல், மா டிவி அதிபர் நெல்லை ராஜா. அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை இயக்குனர் மகேஷ்.  சமாதானபுரம் பிரசாந்த் முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் மற்றும் ராம் தியேட்டர் ஊழியர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News