திருநெல்வேலி தொகுதி அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

திருநெல்வேலி தொகுதி அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்

Update: 2021-03-18 05:46 GMT

திருநெல்வேலி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்

திருநெல்வேலி தொகுதியில் பாஜக., திமுக கட்சியினர் போட்டியிடும் சூழ்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த வேட்பாளர் பால் கண்ணன்  வேட்பு மனு தாக்கல் செய்தார். 

 திருநெல்வேலி தேர்தல் உதவி அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் வேட்பு மனுவை  தாக்கல் செய்தார். அதைத்  தொடர்ந்து செய்தியாளர்களிடம்  கூறியதாவது :- ' திருநெல்வேலி தொகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் சீரமைக்கப்படும். மக்களுடைய அடிப்படைத் தேவைகளை  கேட்டறிந்து அதனை உடனுக்குடன் சரி செய்வதற்கு பாடுபடுவேன்.'  என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News