வங்கி விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் - திருநெல்வேலி மாநகர சைபர் க்ரைம்
வங்கி விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என திருநெல்வேலி மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
வங்கி விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என திருநெல்வேலி மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இது குறித்த அறிக்கையில்..
எந்த ஒரு வங்கியிலிருந்தும் அதிகாரிகள் வாடிக்கையாளர்களை KYC சம்பந்தமாக தொலைபேசியில் தொடர்பு கொள்வதில்லை. தங்களுடைய Bank Account நம்பர், ATM Card நம்பர், CVV மற்றும் OTP நம்பர் பற்றிய விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
மேலும் இது போன்ற சைபர் கிரைம் மோசடிகள் குறித்து https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் உடனடியாக புகார் அளிக்கவும். என பொது நலன் கருதி திருநெல்வேலி மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.