இரவு நேர ஊரடங்கு-பேருந்துகள் இயங்குமா ?

Update: 2021-04-19 12:00 GMT

தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் வெளியிட்ட தகவலில்,தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு நாளை (20ம் தேதி) முதல் அமல்படுத்துவதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டலங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் இயக்க நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதாவது திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.

திருநெல்வேலியில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயக்கப்படும். இவை தவிர தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படும் என்ற விபரத்தை திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News