வழக்குகளை விரைந்து முடிக்க பணிபுரிந்த நீதிமன்ற காவலர்களுக்கு பாராட்டு
நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிசு வழங்கினார்.
கடந்த 12.03.2022 அன்று நடைபெற்ற லோக் அதாலத் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் நிலுவையில் இருந்த 394 IPC வழக்குகளும் , 917 சட்டவிரோத மதுபாட்டில் விற்பனை வழக்குகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை வழக்குகளும் ,112 மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் மற்றும் 68 இதர வழக்குகளாக, மொத்தம் 1,491 வழக்குகள் நீதிமன்றத்தில் முடிக்கப்பட்டு நீதிமன்றத்தால் மேற்படி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட எதிரிகளுக்கு ரூ.2 இலட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நீதிமன்ற வழக்குகளில் எதிரிகளை முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்குகளை விரைந்து முடிக்க காரணமாக இருந்த திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இன்று பாராட்டி பரிசு வழங்கினார்.