கொரோனா பரவல் எதிராெலி: போட்டி தேர்வு 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு; ஆட்சியர் தகவல்

கொரோனா தொற்று பரவல் காரணமாக போட்டித்தேர்வு 11ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-07 15:32 GMT

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில், Combined Statistical Subordinate Services போட்டித்தேர்வு 09.01.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை வட்டத்திலுள்ள 12 தேர்வு மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேற்படித்தேர்வு கொரோனா தொற்று நோய் பரவலின் காரணமாக 09.01.2022 அன்று அரசால் பொது முடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த Combined Statistical Subordinate Services போட்டித்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு அதற்கு பதிலாக 11.01.2022 அன்று செவ்வாய்கிழமை நடைபெறும் என தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதால், மேற்படி தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 12 தேர்வு மையங்களில் முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News