திருநெல்வேலி: தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு நிவாரணப்பொருள்கள் வழங்கல்

திருநெல்வேலி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்-உடற்கல்வி இயக்குநர் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

Update: 2021-09-24 09:51 GMT

திருநெல்வேலி முதன்மைகல்வி அலுவலர் அலுவலகம்(பைல்படம்)

திருநெல்வேலி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் சார்பாக தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மூன்றாம் கட்ட கொரானா நிவாரண பொருட்கள் வழங்கும் விழா திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவில்,  திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  சி.முத்துகிருஷ்ணன்  தலைமை லகித்து,  நிவாரண பொருட்கள் வழங்கினார். தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியார் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் வி. பெரியதுரை  வரவேற்புரை ஆற்றினார் . முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களான (மேல்நிலை)  அமலதங்கத்தாய்  மற்றும் (இடைநிலை)  டைட்டஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும் நிதி உதவி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் மாநில அமைப்புச் செயலாளர் .இசக்கிமுத்து  நன்றி கூறினார். இதுவரை 104 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு (104* 2320)  நிவாரணம் ரூ 2,41,280.00 வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News