கொரோனா விழிப்புணர்வு பணி: தமிழாசிரியருக்கு நற்சான்றிதழ் வழங்கி ஆட்சியர் பாராட்டு

கொரோனா விழிப்புணர்வு பணிக்காக சங்கர்நகர் பள்ளி தமிழாசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

Update: 2021-08-18 15:55 GMT

தமிழாசிரியருக்கு கொரோனா விழிப்புணர்வு சிறப்பான பணிக்காக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.

நெல்லை மாவட்டம் சங்கர்நகரில் உள்ள சங்கர் மேல்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் கொரோனா தொற்று ஆரம்ப காலம் முதல் விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு பிரச்சாரம் செய்தார்.

நெல்லை, பாளையங்கோட்டை, மானூர் தாலுகா உட்பட பல பகுதிகளில் ஆட்டோ மூலம் தெருத்தெருவாக சென்று ஒலிபெருக்கி மூலமும், விழிப்புணர்வு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செயல்படுத்தினார்.

அதனைப் பாராட்டி நெல்லையில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு கொரோனா விழிப்புணர்வு பணியில் சிறப்பாக பணியாற்றிய தற்காக நற்சான்றிதழ் வழங்கி பாராட்டி னார்.

மேலும் அரசு சுதந்திர தின விழாவில் சிறப்பான முறையில் நிகழ்வை தொகுத்து வழங்கியதற்காவும் தமிழ் ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

Tags:    

Similar News