நெல்லை:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மகாத்மா காந்தியிடம் மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர்

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் மிதி வண்டியில் வந்து மகாத்மா காந்தியிடம் மனு அளித்து நூதன போராட்டம்.

Update: 2021-07-12 17:23 GMT

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லை தச்சநல்லூர் பகுதியில் மகாத்மா காந்தியிடம் மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர்.

தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நெல்லை, தச்சநல்லூர் பகுதியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர்.

ஆனால். அதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை.]:இதனால், காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்தியிடம் மனு அளிக்க முடிவு செய்து, மத்திய அரசுக்கு அறிவுரை சொல்லவும், சுதந்திர இந்தியாவில் மக்கள் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்ற கோரிக்கையுடன் மகாத்மா காந்தி சிலைக்கு மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் விதமாக மிதிவண்டியில்  வந்தனர். தொடர்ந்து அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News