நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு அதிமுக சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து

நெல்லை மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மாணவி கீர்த்திகா நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்

Update: 2022-01-30 14:30 GMT

 அதிமுக நெல்லை கிழக்குப் பகுதி செயலாளர் காந்தி வெங்கடாசலம் மாணவி கீர்த்திகாவுக்கு பொன்னாடை போர்த்தி  வாழ்த்து தெரிவித்தார்.

.நெல்லையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி கிருத்திகாவுக்கு அதிமுக சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாநகராட்சி கல்லணை மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவி கீர்த்திகாவுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடம் ஒதுக்கீடு கிடைத்துள்ளது.நெல்லை டவுன் வ.உ.சி தெருவில் வசித்து வரும் மாணவி கீர்த்திகாவுக்கு கோயம்புத்தூர் பிஎஸ்சி மெடிக்கல் காலேஜில் இடம் கிடைத்துள்ளது.மாணவி கீர்த்திகாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அதிமுக நெல்லை கிழக்குப் பகுதி செயலாளர் காந்தி வெங்கடாசலம் மாணவி கீர்த்திகாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News