நெல்லையில் நூதன முறையில் அதிமுக வேட்பாளர் பாலுசாமி வாக்கு சேகரிப்பு
நெல்லை 22 வது வார்டு அதிமுக வேட்பாளர் S.பாலுசாமி காய்கறிகளை எடை போட்டு மக்களுக்கு வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் மாமன்ற பதவிக்கு போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
22 வது வார்டில் அதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் S.பாலுசாமி பேட்டை பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது காய்கறி விற்கும் வியாபாரியிடம் தராசு வாங்கி காய்கறிகளை எடை போட்டு மக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தார்.