பொதுத் தேர்வில் சாதனை படைத்த 3 மாணவிகளுக்கு அப்துல் வகாப் எம் எல் ஏ வாழ்த்து!

திருநெல்வேலி டவுனில் அமைந்துள்ள கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2023-05-17 16:01 GMT

திருநெல்வேலி டவுனில் அமைந்துள்ள கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் எம் எல் ஏ அப்துல் வஹாப் கலந்து கொண்டு சாதனை மாணவிகளைப் பாராட்டினார்.

இந்த ஆண்டுக்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், அதில் பல்வேறு மாவட்டத்திலிருந்தும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு சாதனைகளையும் படைத்தனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பிலும் அந்தந்த பகுதி எம் எல் ஏக்கள் சார்பிலும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் திருநெல்வேலி டவுன் பகுதியில் இருக்கும் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை பாராட்டும் விதமாக விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பள்ளி அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற நர்மதா, சந்தோஷினி, உமா ஆகிய மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அப்துல் வஹாப் மூன்று மாணவிகளுக்கும் பொன்னாடை போர்த்தினார். 3 மாணவிகளுக்கும் உதவித் தொகையையும் வழங்கினார். 

Tags:    

Similar News