சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 22 நபர்கள் கைது.

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-04 11:30 GMT

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து 01.05.2021-ம் தேதி முதல் 03.05.2021 தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 22 நபர்களை ஜிழிறி கிநீt -ன் கீழ் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 193 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News