திருநெல்வேலி மாநகர போலீசார் கொரோனா விழிப்புணர் பிரசாரம்

திருநெல்வேலி மாநகர போலீசார் பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

Update: 2021-05-12 11:00 GMT

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் .T.S.அன்பு . உத்தரவின் பேரில்,  நெல்லை மாநகர பகுதிக்குட்பட்ட அனைத்து காவல்நிலைய பகுதிகளில், போலீசார்  பொதுமக்களிடையே முழு ஊரடங்கு குறித்து விளக்கி கூறினர்,

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும், மிக அவசிய தேவைகளுக்கு வெளியில் வரும்பொழுது ஊரடங்கு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினர்.,

முகக்கவசம் அணியாத வர்களுக்கு முக கவசம் வழங்கி, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சமூக இடைவெளி கடைபிடித்தல் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


Tags:    

Similar News