நெல்லை:அம்பாசமுத்திரம் தாமிரபரணிஆற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கடையநல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஜாஹிர் ஹூசைன் (35) உயிரிழந்தார்.

Update: 2021-07-15 00:53 GMT

அம்பை தாமிரபரணியில் மூழ்கிய இளைஞர் பலி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், அல்லி மூப்பன் தெருவைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா மகன் ஜாஹிர் ஹூசைன் (35). இவர் கத்தாரில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன் விடுமுறையில் கடையநல்லூருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் நண்பர்களுடன் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்தார். அம்பாசமுத்திரம் சின்ன சங்கரன் கோவில் அருகே உள்ள அணைக்கட்டுப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார், உடனிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் காப்பாற்ற முடியவில்லை.

உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் தீயணைப்பு மீட்பு வீரர்கள் வந்து நீரில் மூழ்கிய ஜாஹிர் ஹூசைன் உடலை உயிரற்ற நிலையில் மீட்டனர். இதையடுத்து  அம்பாசமுத்திரம் போலீசார் ஜாஹிர் ஹூசைன் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அம்பாசமுத்திரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Similar News