கபசுர குடிநீர் வழங்கிய தன்னார்வலர்கள்.

Update: 2021-05-16 09:09 GMT

கொரோனா தொற்று 2ம் அலை கடந்த நாட்களில் நெல்லையில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வந்தது இதனால் உயிர்யிழப்புகள் ஏற்பட்டது.கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அரசுடன் தன்னார்வலர்களும்  தாங்களால் முடிந்த பணியினை செய்து வருகின்றனர்.

பாளையங்கோட்டை பகுதி முஸ்லிம் மதரஸா தொடக்கப்பள்ளியில் தன்னார்வலர்கள்  கடந்த 11 நாட்களாக  கபசுர குடிநீர் தயார் செய்து  பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது ஆனாலும் கொரோனா தடுப்பு பணியில் இருந்த காவல்துறையினர்க்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.வயல்களில் நாத்து நடவு பணியில் இருந்த பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது

Tags:    

Similar News