விமண் இந்தியா மூவ்மென்ட் பெண்கள் அமைப்பு சார்பில் மூலிகை குடிநீர்..

Update: 2021-05-18 10:07 GMT

நெல்லை மாவட்டத்தில் விமண் இந்தியா மூவ்மென்ட் பெண்கள் சார்பில்  மூலிகை குடிநீர்  வழங்கப்பட்டது.

கொரோனா இரண்டாம் கட்ட பரவல் அதிகரித்து வரும் சூழலில் எஸ்டிபிஐ கட்சியின் விமண் இந்தியா மூவ்மென்ட் பெண்கள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பர்கிட்மாநகரம் விமண் இந்தியா மூவ்மென்ட் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் ரினோஷா ஆலிமா துவக்கிவைத்தார்.நிகழ்ச்சியின் மூலம் நூற்றுக்கணக்கானோர் கபசுரக் குடிநீர் வாங்கி சென்றனர். 

இதில் பர்கிட்மாநகர விமண் இந்தியா மூவ்மென்ட் நிர்வாகிகள் தலைவர் நவ்ரோஸ்பானு, துணைதலைவர் ஜீனத்பேகம், செயலாளர் வஹிதாபானு, செயற்குழுஉறுப்பினர்கள் அனீஸ்பாத்திமா,பஷீரால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


Tags:    

Similar News