கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்களில் திருச்சி கலெக்டர் ஆய்வு
கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்களில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டம் முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சியை அடுத்து கம்பரசம் பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.