திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் முன் ஓ.பி.சி. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன் ஓ.பி.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-08-05 13:42 GMT

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன் ஓபிசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு இரயில்வே தொழிலாளர் இயக்கம் சார்பாக திருச்சி கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன் பொது செயலாளர் அப்சல்  அறிவுரையின் படி திருச்சி கோட்ட செயலாளர்  பாலசுப்பிரமணியன் தலைமையிலும்,  முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக, உதவி பொதுச் செயலாளர் பிரசன்ன கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

தென்னக இரயில்வே முழுவதும் ஓ.பி.சி. இன தொழிலாளர்கள் அனைவருக்கும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு சரியான முறைப்படி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், ஓ.பி.சி. பிரிவினருக்கான பின்னடைவு,பதவி உயர்வு வாய்ப்பினை தாமதப்படுத்தி மூப்பு நிலை இழப்பு, பொருளாதார இழப்பை தடுக்க கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வினை கோட்ட தொழிலாளர் நல நிதியுதவி கமிட்டி உறுப்பினர் சகாய விஜய் ஆனந்த்   ஒருங்கிணைத்தார். இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான ரயில்வே தொழிலாளிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News