திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவிற்கு 2 பேர் பலி

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவிற்கு 2 பேர் பலியாகி உள்ளனர். 49 பேர் புதிதாக பாதிப்பு அடைந்திருக்கிறார்கள்.

Update: 2021-10-15 15:35 GMT

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 51 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 521 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1040 பேர் பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News