சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு ஐந்து ஆண்டு சிறை
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நேருஜி தெருவில் வசிப்பவர் முனிச்சாமி, 61. இவர் இந்த பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்திரவு கொடுத்தார். சம்பவம் தொடர்பாக தேனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லுார்துமேரி வழக்கு பதிவு செய்து,
முனிச்சாமியை கைது செய்தார். இந்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி வெங்கடேஷன் குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.