அண்ணாமலை ஊழல் பட்டியலை படிப்பதைவிட விலைவாசி பட்டியலை படிக்க வேண்டும் :வீரமணி

ஆதீனம் என்ற ஒன்றையே திராவிட இயக்கங்கள்தான் காப்பாற்றி இருகின்றன என்றார் திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி

Update: 2022-06-12 03:30 GMT

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பேசுகிறார், திராவிடர் கழக  தலைவர் கி. வீரமணி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியலை படிப்பதைவிட முதலில் விலைவாசி பட்டியலை படிக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த திராவிட கழகத் தலைவர் வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறியதாவது: ஆதீனம் என்ற ஒன்றையே திராவிட இயக்கங்கள்தான் காப்பாற்றி இருகின்றன. இந்த வரலாறு  தெரியாமல் ஆதீனம் மற்றும்  சம்பந்தப்பட்டவர்கள் பல்வேறு கருத்துகளை பேசுகின்றனர். நித்யானந்தா உள்ளிட்டோரிடம் ஆதீனம் பட்ட பாட்டை கேட்டு பாருங்கள். அப்போது அவர்கள் நாக்கு உள்ளே சென்று விடும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியலை படிப்பதைவிட அதிகப்படியாகவே இருக்கும் விலைவாசி பட்டியலை முதலில் படிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

Tags:    

Similar News