பத்திரிகையாளர்கள் சார்பில் விவேக்கிற்கு அஞ்சலி

Update: 2021-04-17 10:30 GMT

தென்காசி மாவட்ட தலைமை மீடியா மற்றும் பிரஸ் கிளப் சார்பில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நடிகரும், சமூகஆர்வலருமான விவேக் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதோடு அவருடைய ஆன்மா சாந்தியடைய தென்காசி மாவட்ட தலைமை மீடியா மற்றும் பிரஸ் கிளப் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரஸ் கிளப் தலைவர் இசக்கிராஜன், செயலாளர் செந்தில், பொருளாளர் கணேசன், நிர்வாகிகள் கணேஷ்குமார், முப்புடாதி, இசக்கிராஜ், பாலசுப்பிரமணியன், ஜீவா, பொதிகை முருகன், குமார், பாலமுருகன், தங்கராஜ், சம்பத், ராஜா, டேவிட், பெரியார், இசக்கிமுத்து, அசோக்குமார், மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News